குட் நியூஸ்... தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை கொட்டும்... வானிலை ஆய்வு மையம்
Recommended Video
சென்னை: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மற்றும் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செ.மீ., மயிலாப்பூரில் 4 செ.மீ., மழையும் பெய்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த கடற்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.