ஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
Recommended Video
சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீடாமங்கலத்தில் 4 சென்டிமீட்டரும், திருவாரூர், அதிராமப்பட்டினத்தில் 3 சென்டிமீட்டரும், வல்லம், மதுக்கூரில் 2 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும். மாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரில்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையின் சில பகுதிகள் லேசான மழை மற்றும் தூறல்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது புயலுக்கு வாய்ப்பில்லை என்பதால் மழையை மட்டுமே நாம் நம்பி இருக்க வேண்டும். ஒருவேளை புயல் நம்மை நோக்கி நகர்ந்தால் பலன் கிட்டும்.
வியாக்கிழமை முதல் திங்கள் வரை கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை இருக்கும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.