சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை.. தண்ணீர் பிரச்சனை தீரும் என எதிர்பார்ப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை. சென்னை வானிலை மையம் தகவல்

    சென்னை: மழைக்காக தவமாய் தவமிருக்கும் தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலாக நல்ல மழை பெய்தது.

    வெப்பசலனம் மற்றும் தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வடகடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது

     Heavy rains in Chennai and suburbs.. People in happiness

    இந்நிலையில் சென்னையில் நேற்றிரவு அடையாறு, கோயம்பேடு, வேளச்சேரி, ஆலந்தூர், வில்லிவாக்கம், கொளத்தூர், ராயப்பேட்டை, ராயபுரம், காசிமேடு போரூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், கிண்டி, வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளிலும் நல்ல மழை கொட்டித் தீர்த்தது.

    வேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்.. யார் கைக்கு போகும்?? வேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்.. யார் கைக்கு போகும்??

    அதே போல புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை சுமார் 1 மணி நேரம் கொட்டித் தீர்த்தது.

    கடந்த சில வாரங்களாகவே சென்னையில் அவப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு கொட்டி தீர்த்த மழையால் தலைநகர்வாசிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடும் தண்ணீர் பஞ்சம் சற்று குறையவாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என எதிர்பார்ப்பு தெரிவித்தனர்.

    கடந்த 4 மாதங்களாக சென்னையில் மழையேஇல்லாமல் வாட்டி வதைத்த வெயிலால் மிகவும் சிரமத்தை எதிர் கொண்டு வருகிறோம். ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக இரவில் நல்ல மழை பெய்கிறது.

    கிளைமேட்டும் அவப்போது குளிர்ச்சியாக மாறுகிறது. இதனை நன்றாக என்ஜாய் செய்வதாக தலைநகர்வாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மழை இதே போல சில நாட்களுக்கு நீடித்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினர்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் நல்ல மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர துவங்கியுள்ளது. தண்ணீர் பிரச்சனையும் சிறிது தீர்ந்துள்ளது என குறிப்பிட்டனர் மக்கள்.

    English summary
    Widespread rains in Chennai and suburbs since last night. The residents of the capital are very happy with the torrential rains last night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X