தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வந்தாலும் போதிய அளவு மழை இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இந்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் ஆகஸ்ட் 4-ந் தேதிக்கு பின் மியான்மர் அருகே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நம்பர் 1.. கல்வியில் பல வல்லரசு நாடுகளை முந்திய தமிழகம்.. GER விகிதத்தில் முதலிடம்!
ஆனால் இந்த புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.