சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விரட்டி விரட்டி பிடிக்கும் போலீஸ்..அபராதம்.. சென்னையில் வாகனத்தில் செல்வோருக்கு கடும் கட்டுப்பாடுகள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வாகனங்களில் பொதுமக்கள் சுற்றுவதை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். பைக்கில் இரண்டு பேர் சென்றாலே வளைத்து பிடித்து ரூ.500 அபராதம் விதிக்கிறார்கள்.

மாஸ்க் அணியாமல் சென்றாலும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, ஐந்தாவது கட்டமாக வரும் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, அனைத்து வகை தொழில்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாக்கைத் துருத்திக் கொண்டு பாமாவும், ஆடி அசைந்து உமாதேவியும்.. இரு நாக்கைத் துருத்திக் கொண்டு பாமாவும், ஆடி அசைந்து உமாதேவியும்.. இரு "குட்டி"களின் கதை..!

சென்னை

சென்னை

எனினும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த 4 மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும் சென்னையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, டாக்சிகள் ஓட அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மக்கள் மதிக்கவில்லை

மக்கள் மதிக்கவில்லை

டாக்சிகளில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர், ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பேர், மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல சென்னையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் மக்கள் பாதிப்புகளை உணராமல் எப்போதும் போல் இயல்பாக வாகனங்களில் பயணிக்கிறார்கள். பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பியது போன்று சென்னையில் காணப்படுகிறது.

அபராதம் விதிப்பு

அபராதம் விதிப்பு

இந்நிலையில் . சென்னையில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருவதால், அரசு விதித்த கட்டுப்பாடுகளை போலீசார் நேற்று முதல் தீவிரமாக அமல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்றால் போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்து ரூ.500 அபராதம் விதித்தனர்.

மாஸ்க் அணியாவிட்டாலும்

மாஸ்க் அணியாவிட்டாலும்

மேலும் முககவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவர்களுக்கும் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னையில் வாகன ஓட்டிகளிடம் சோதனையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்கள் தவிர தேவை இல்லாமல் வாகனங்களில் பொதுமக்கள் சுற்றுவதை தடுக்க தீவிர நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர்.

English summary
police Heavy restrictions on two-wheelers in Chennai due to coronavirus issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X