அழகு சிறுவனை பாதித்த அரியவகை புற்றுநோய்.. உயிரை காக்க போராடும் பெற்றோர்.. உதவுங்கள்!
சென்னை: அரிய வகை கேன்சர் நோயால் அவதிப்படும் 5 வயது சிறுவனுக்கு கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவுமாறு அவரது தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுருளி கிருஷ்ணனின் மகன் லலித் கிஷோர் (5). இவர் Ewing Sarcoma என்னும் அரியவகை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கான சிகிச்சைக்கு அவரது தந்தை தன்னால் இயன்ற அளவுக்கு மருத்துவ செலவுகளை அளித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது மேலும் 6 மாதங்களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கு மேற்கொண்டு செலவாகும் என்பதால் கருணை உள்ளம் கொண்டவர்கள் தனது குழந்தைக்கு உதவ வேண்டும் என சுருளி கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரை தொடர்பு கொள்ள 99405 10220, 90432 48550 எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே கருணை உள்ளம் கொண்டவர்கள் சின்னஞ்சிறிய குழந்தையின் உயிரை காக்க பண உதவி அளிக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
எவிங் சர்கோமா என்ற அரிய வகை கேன்சர் குழந்தைகள் மற்றும் டீனே ஏஜ் சிறுவர், சிறுமியர்களுக்கு வரும். எலும்புகளில் அல்லது எலும்புகளை சுற்றி இருக்கும் சதைகளில் ஏற்படும் இந்த கேன்சர் ஏற்படும் இடங்களில் வீக்கத்தையும் கடும் வலியையும் கொடுக்கும். சிலருக்கு காய்ச்சலும் எலும்பு முறிவும் ஏற்படும்.
இது மேற்கொண்டு பரவாமல் இருந்தால் சீக்கிரமே குணப்படுத்தலாம் என்கிறது மருத்துவத் துறை.
RECOMMENDED STORIES