இதய நோய்.. துடிக்கும் 2 வயது குழந்தை.. சிகிச்சைக்கு உதவி செய்யுங்கள் ப்ளீஸ்
சென்னை: 2 வயது குழந்தை விக்னேஷ் சிகிச்சைக்கு நிதி தேவைப்படுகிறது. விக்னேஷ் தந்தை வெங்கடேஷ், தாயார் டில்லி ராணி. வெங்கடேஷ் ஆந்திராவின் சித்தூரில் நெசவாளராக பணிபுரிகிறார், டில்லி ராணி வீட்டை பராமரித்து வருகிறார். விக்னேஷ் குறைமாதத்தில் பிறந்த குழந்தை. எனவே, பிறந்ததும், இங்குபேட்டரில் வைக்கப்பட்டார். பிறப்பிலேயே அவருக்கு இதய நோய் உள்ளது.
இதை தெரிந்ததும், மருத்துவ ஆலோசனைகளுக்காக அவரது பெற்றோர் விக்னேஷை செகந்திராபாத் அழைத்துச் சென்றனர். இன்னும் விக்னேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த சிறுவனின் உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் இல்லை. அதுமட்டுமின்றி, விக்னேஷ் ஒரு பிடிவாதமான குழந்தையாக மாறிவிட்டார். "எனக்கு சாக்லேட்டுகள் தேவை, எனக்கு பொம்மைகள் தேவை" என்று விக்னேஷ், அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்.
விக்னேஷின் குடும்ப பின்னணி ஏழ்மை நிலையில் உள்ளது. சிகிச்சையை தொடர அவர்களிடம் போதிய பணம் இல்லை. Biventricular என்ற சிகிச்சையை மேற்கொண்டால்தான், விக்னேஷை காப்பாற்ற முடியும்.
இந்த அறுவை சிகிச்சைக்கு 3 லட்சம் செலவாகும். ஒரு நெசவாளராக, வெங்கடேஷுக்கு, இவ்வளவு பெரிய பணம் ஈட்டுவது கடினமான விஷயமாகும்.
எனவே, இந்த குடும்பத்திற்கு உங்கள் உதவி தேவை. முடிந்த அளவுக்கு நிதி உதவி செய்து, விக்னேஷ் உயிரை காப்பாற்ற உதவுங்கள்.
Recommended Video
"நாங்கள் ஏழைகள், ஆனால் எங்கள் குழந்தை எங்களுடன் இருக்கும்போது நாங்கள் பணக்காரர்களாக உணர்கிறோம்" என்று விக்னேஷின் பெற்றோர் பெருமையாக சொல்கிறார்கள். அவர்கள் பெருமிதத்தை காப்பாற்ற விக்னேஷ் சிகிச்சைக்கு தயவுசெய்து உங்களால் முடிந்த உதவியை செய்யவும், நன்றி.
RECOMMENDED STORIES