இப்படியே போனா கார், பைக்கை தூக்கி போட்டுட்டு boat வாங்க வேண்டியதுதான்.. வெள்ளக்காடான சென்னை
சென்னை: சென்னையில் நிவர் புயலால் கனமழை பெய்ததில் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் சென்னை மற்றும புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி சாலையில் வெள்ளமென வழிந்தோடியது.
சென்னையின் பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட தூரத்திற்கு மழை நீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தார்கள். சென்னை நிலவரம் குறித்த ட்வீட்டுகள் உங்களுக்காக...
|
கடலூரில் கனமழை
நிவர் புயல் கரையை கடந்து வரும் நிலையில் கடலூரில் கனமழை பெய்து வருகிறது.
|
வாகன ஓட்டிகள்
பாரிமுனையில் முட்டி அளவுக்கு தேங்கிக் கிடக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளார்கள்.
|
வாகனம்
மெரினா கடற்கரையில் கடலில் இருந்து தண்ணீர் வெளியேறிய காட்சிகள். வாகனம் விடும் இடம், கடைகள் இருக்கும் இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
|
மின்சாரம்
அம்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
|
லட்சணம்
இன்று மதியம் எடுத்தது. வண்டலூர் அருகே, சென்னை - திருச்சி பைபாஸ் சாலை முழுவதும் வெள்ளம். Highway வே இந்த லட்சணம் என்றால், சென்னை நகரம் எப்படி இருக்கும் என்பதை நாம் அறியலாம்.