எம்எல்ஏ, எம்பி பதவியை வகித்த அனுபவம் கொண்டவர்கள் இந்திய கம்யூ. வேட்பாளர்கள்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட இரு வேட்பாளர்களும் எம்எல்ஏ, எம்பியாக இருந்த அனுபவம் பெற்றவர்கள்.
லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக கட்சி, இந்தசிய முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடக் கூடிய தொகுதிகள் குறித்த விவரங்களை நேற்றைய தினம் அறிவித்தது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
எல்லாம் 7+1 செய்த மாயம்.. ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க பாமக ஆதரிக்கும்.. பாமக விளக்கம்
சுப்பராயன்
நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் திருப்பூர் வேட்பாளர் சுப்பராயன் குறித்த சுயவிவரங்களை பார்ப்போம். 77 வயதாகும் சுப்பராயனின் சொந்த ஊர் திருப்பூர். இவர் 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
மாநில பதவிகள்
முழு நேர அரசியல் மற்றும் தொழிற்சங்க பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 1985-88, 1996-2001 வரை எம்எல்ஏவாகவும், 2004-09 வரை எம்பியாகவும் இருந்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர், தேசிய நிர்வாக குழு உறுப்பினர், ஏஐடியூசி மாநில தலைவர் பதவிகளை வகித்துள்ளார்.
செல்வராஜ்
இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். அது போல் நாகைக்கு தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வராஜ் அத்தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 72 வயதாகும் இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லி கிராமம்.
நாகை மாவட்ட செயலாளர்
1989- 91, 1996-1998, 1998- 1999 வரை 3 முறை எம்பியாக இருந்தவர். இந்திய கம்யூனிஸ்ட், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் நாகை மாவட்ட செயலாளராக பதவி வகித்துள்ளார். இவர் தற்போது மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.