கருணாநிதி, ஜெயலலிதா இறப்பில் ஒரு ஒற்றுமையை கவனீத்தீர்களா?.. ஒரு பிளாஷ்பேக்
Recommended Video
சென்னை: தமிழகத்தின் அரசியல் ஜாம்பவான்களான கருணாநிதி, ஜெயலலிதா இறப்பில் ஒரு ஒற்றுமை இருந்துள்ளது.
ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு ஜாம்பவான்கள் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்தனர். இருவரிடமும் சிறு சிறு மன வருத்தம் இருந்தாலும் மக்கள் திட்டங்களை செவ்வனே செய்தனர்.
மக்கள் நலனை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் யாருக்காவும் சமரசம் செய்து கொண்டதில்லை. இதனால்தான் இவர்களை கட்சியினர் மட்டுமல்லாத மக்களும் போற்றி வருகின்றனர்.
மறைந்த கருணாநிதியின் படத்துக்கு "மாலை அணிவிக்காத" தொண்டர்கள்.. ஏன் தெரியுமா?
பிளாஷ்பேக்
இத்தகைய கருணாநிதி மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன. இதையொட்டி அவர் குறித்த சில தகவல்கள் பிளாஷ்பேக்காக.. உங்களுக்காக..
கருணாநிதி
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவருக்குள்ளும் ஆட்சி, அதிகாரம் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏராளமான வித்தியாசங்கள் இருந்தன. இருவரும் பெரும்பாலும் மக்கள் பிரச்சினைகளுக்காக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்த வண்ணம் இருப்பர்.
2033
இந்நிலையில் இரு வேறு துருவங்களாக அரசியலில் பயணித்த இருவரது இறப்பில் ஒரு ஒற்றுமை உள்ளது. அதாவது ஜெயலலிதா இறந்த தினம்- 05.12.2016- இவற்றை கூட்டினால் 2033 என்று வருகிறது.
8 கூட்டுத் தொகை
அதுபோல் கருணாநிதி இறந்த தினம் - 07.08.2018- இவற்றை கூட்டினாலும் 2033 என்று வருகிறது. மற்றொன்று இந்த இரு தேதிகளையும் மொத்தமாக கூட்டினால் இரட்டை படை எண் 8 வருகிறது. இதுதான் அவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை ஆகும்.