2017- இல் சொன்னார்.. டிசம்பர் 2020-இல் சொன்னதை செய்கிறார்.. ரஜினியும் டிசம்பர் 31-ம்!
சென்னை: 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்றார், தற்போது 2020 டிசம்பர் 31-ஆம் தேதி அரசியல் கட்சியை அறிவிக்கிறார். இதை பார்க்கும் போது கண்ணா நான் சொல்றதைத்தான் செய்வேன், செய்யறதைதான் சொல்வேன் என்ற பஞ்சை ரசிகர்கள் நினைவுப்படுத்துகிறார்கள்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து தனது உடல்நிலை குறித்து கூறியிருந்தார்.
இதனால் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என பலர் கருதினர். ஆனால் உண்மையான ரசிகர்கள் மட்டும் அவர் சொன்ன வாக்கை காப்பாற்றுவார், நிச்சயம் வருவார் என்றனர்.
தமிழக மக்களுக்காக என் உயிர் போனாலும் சந்தோஷம்தான்.. அரசியலுக்கு வருவது உறுதி- ரஜினிகாந்த் பேட்டி
ரஜினி
இந்த நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் ரஜினிகாந்த் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் வரப்போகிற சட்டசபை தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.
அதிசயம்
மேலும் அற்புதம், அதிசயம், நிகழும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பு குறித்து டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்கிறார். இந்த நிலையில் ரசிகர்கள் ரஜினியின் அறிவிப்பை கொண்டாடி வருகிறார்கள். மேலும் ரஜினி சொல்றதைதான் செய்வார், செய்வதைத்தான் சொல்வார் என்ற பன்ச்சை கூறி வருகிறார்கள்.
அம்பு
அதாவது ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 2017-ஆம் ஆண்டு ராகவேந்திர திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்தாகிவிட்டது. இன்னும் அம்பு விடுவது மட்டும்தான் பாக்கி என்றார்.
ரஜினிகாந்த்
இது ரசிகர்களுக்கு கொடுத்த புத்தாண்டு பரிசாகவே அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அதே போல் அன்று அரசியல் கட்சியை தொடங்குவேன் என கூறிய ரஜினிகாந்த் தற்போது டிசம்பர் 31-ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார். இதனால் ரஜினியும் டிசம்பர் 31-ஆம் தேதியும் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.