அதிமுகவிடம் 5 சீட் கேட்கும் இந்து மக்கள் கட்சி.. கிடைக்காவிட்டால் தனித்தே போட்டி- அர்ஜூன் சம்பத்
சென்னை: அதிமுக கூட்டணியில் 5 சீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்துவோம்; 5 தொகுதிகள் கிடைக்காவிட்டால் தனித்து போட்டியிடுவோம் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்; ரஜினிகாந்த் தமிழக முதல்வராவார் என இடைவிடாமல் பேசி வந்தவர் அர்ஜூன் சம்பத். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காத நிலையில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறி வருகிறார்.
கோவையில் இந்து மக்கள் கட்சியின் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், அதிமுகவிடம் 5 சீட் கேட்டிருகிறோம். நாங்கள் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கிறோம்.
அரசின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து கூறினால் தேசத்துரோகிகளா - மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு!
அப்படி அதிமுக 5 சீட் தராவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம் என்றார்.