துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்கவில்லை அமித் ஷா.. சென்னை பயணம் திடீர் ரத்து
சென்னை: துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தனது பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார்.
ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடைபெறும் துக்ளக் ஆண்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில்தான், உடல்நிலையை காரணம் காட்டி ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று தெரிவித்தார். எனவே அவர் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அமித்ஷா தனது வருகையை ரத்து செய்துள்ளார். அவருக்கு பதிலாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
ஜேபி நட்டா மீதான தாக்குதல் எதிரொலி: மே.வங்க தலைமை செயலாளர், டிஜிபிக்கு மத்திய அரசு சம்மன்
Recommended Video
அமித் ஷா, இந்த வருகையை ரத்து செய்தது ஏன் என்பதற்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.