விரைவில் அமித் ஷா டிஸ்சார்ஜ்.. எய்ம்ஸ்... மருத்துவ அறிக்கை வெளியீடு!!
சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைந்து விட்டார். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி அமித் ஷா சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா குணமடைந்து இருந்தார். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு ஏற்பட்ட உடல்நலம் கோளாறு காரணமாக ஆகஸ்ட் 17 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்குப் பின்னர் அவரது ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
எய்ம்ஸ் இன்று வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். குணமடைந்து விட்டார். விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்'' என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் குருகிராமில் இருக்கும் மேதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். வீடு திரும்பிய நிலையில் மீண்டும் அவருக்கு உடல் சோர்வு மற்றும் உடல் வலி ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தியாவில் கொரோனாவிற்கு 34,63,973 பேர் பாதிப்பு - 26,48,999 பேர் மீண்டனர்
வீடு செல்லும் வரை மருத்துவமனையில் இருந்தே அலுவல் பணிகளை கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.