வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இதில் ஏதேனும் ஒரு ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள்
Recommended Video
சென்னை: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது, மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஓட்டுபோட வரும் வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வந்து வாக்களிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தால் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை வாக்குச்சாவடி சீட்டுடன் கொண்டு வந்து வாக்களிக்க முடியும்.
கீழ்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்துடன், புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி சீட்டு (பூத் சிலிப்) கொண்டுவந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்.
1. பாஸ்போர்ட்(கடவுச்சீட்டு).
2.ஓட்டுனர் உரிமம்(டிரைவிங் லைசன்ஸ்).
3.மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான பணியாளர் அடையாள அட்டை.
4.வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் வழங்கப்பட்டு உள்ள புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகங்கள்.
5.வருமானவரி நிரந்தர கணக்கு எண் அட்டை(பான்கார்டு).
6.தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை.
7.மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அட்டை.
8.மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை.
9.புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.
10.நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலக அடையாள அட்டை.
மேற்கண்ட 11 வகை ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு வந்து வாக்களிக்கலாம்.