சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வயர்லெஸ்சில் பறந்த தகவல்.. நெல்லை அருகே சேஸிங்.. சபாஷ் சிபிசிஐடி.. 5 போலீசார் கைது பரபர பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று இரவு முதல் பரபரத்து கிடக்கிறது தென் தமிழகம்.. சாத்தான்குளம் சித்திரவதை கொலை தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான, போலீசாரை விரட்டி விரட்டி சேஸிங் செய்து கைது செய்துள்ளனர் சிபிசிஐடி போலீசார்.

Recommended Video

    தந்தை மகன் சித்ரவதை கொலையில் தொடர்புடைய போலீஸார்கள் அடுத்தடுத்து கைது

    சாத்தான்குளம் பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக பல சாட்சியங்களும் ஆதாரங்களும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

    இத்தனைக்கும் அவர்கள் செய்த 'பெரும்குற்றம்' குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு செல்போன் கடையை திறந்து வைத்து இருந்தார்களாம். அப்படி நடந்திருந்தால் அது தவறுதான் என்ற போதிலும் கைது நடவடிக்கை, அபராதம் உள்ளிட்டவை சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதே தவிர, லாக்கப்பில் வைத்து சித்திரவதை செய்வது சட்டத்தை மீறிய செயல் என்பதால்தான் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுக்க இந்த சம்பவத்துக்கு இத்தனை கொந்தளிப்புகள்.

    சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு.. காவலர் ரேவதிக்கு பாதுகாப்பும், ஊதியமும் வழங்க மதுரை கிளை உத்தரவு சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு.. காவலர் ரேவதிக்கு பாதுகாப்பும், ஊதியமும் வழங்க மதுரை கிளை உத்தரவு

    ஜெட் வேகத்தில் சிபிசிஐடி

    ஜெட் வேகத்தில் சிபிசிஐடி

    உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்ததோடு சிபிசிஐடி விசாரணைக்கு ஒப்படைத்தது. வழக்கை கையில் எடுத்த கையோடு, சிபிசிஐடி விசாரணை ஜெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்தது. மொத்தம் 12 டீம்கள் போட்டுள்ளதாக கூறுகிறார் சிபிசிஐடி ஐஜி சங்கர். சமீப காலத்தில் எந்த வழக்கிற்கும் இத்தனை டீம்கள் போடப்பட்டது கிடையாது என்கிறது போலீஸ் வட்டாரம்.

    விமர்சனங்கள்

    விமர்சனங்கள்

    நேற்று இரவு, சாத்தான்குளம் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவர் மட்டுமே கைது செய்யப்பட்டதால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஒரு காவல் நிலையம் என்பது இன்ஸ்பெக்டரின் முழு கட்டுப்பாட்டில் இருக்க கூடிய பகுதி. அவருக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய விஷயம் எப்படி நடக்க முடியும்? ஏன் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்படவில்லை என்று கடும் கேள்விகள் எழுந்தன.

    5 போலீசார் கைது

    5 போலீசார் கைது

    இந்த நிலையில் இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், மற்றும் கான்ஸ்டபிள் முத்துராஜ் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இறுதியாக ஆய்வாளர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்ட பிறகு மக்களிடம் ஓரளவு கொந்தளிப்பு அடங்கி உள்ளது என்று சொல்லலாம். ஆகமொத்தம் நேற்று இரவு முதல் இன்று காலை வரை, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர்போகும் அளவுக்கு தந்தை மற்றும் மகனை தாக்கியது ஏன் என்று சிபிசிஐடி போலீசார் அவர்களிடம் துருவித்துருவி விசாரித்து வருகின்றனர்.

    தாமதம் ஏன்

    தாமதம் ஏன்

    உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட நிலையில் மற்றவர்களை கைது செய்ய ஏன் தாமதம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவருமே தலைமறைவாக இருப்பதாக சிபிசிஐடி வட்டாரங்கள் கூறுகின்றன. இவர்களில் பல போலீசார் தப்பி ஓடிய போது, வாகன சோதனைகளிலும், சேஸ் செய்தும்தான் பிடித்துள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    வயர்லெஸ் செய்தி, சேஸிங்

    வயர்லெஸ் செய்தி, சேஸிங்

    நேற்று இரவு ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் உள்ள சோதனைச்சாவடி போலீசாருக்கு வயர்லெஸ்சில் தகவல்கள் பறந்துள்ளன. சாத்தான்குளம் வழக்கில் தொடர்புள்ளவர்கள் நமது மாவட்ட எல்லையை கடந்துவிடக் கூடாது. தக்க சோதனை நடத்துங்கள் என்று இன்ஸ்ட்ரக்ஷன் பறந்துள்ளன. இதையடுத்து ஒவ்வொருவராக சிக்க ஆரம்பித்தனர். அதேநேரம், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை, நெல்லை டூ மதுரை சாலையில், வாகனத்தில் சேஸ் செய்து பிடித்துள்ளது சிபிசிஐடி காவல்துறை.

    English summary
    How CBCID police have been arrested 5 police men attached with Sathankulam police station? here is the back round story.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X