கொரோனா தொற்றை வீட்டிலேயே 10 நிமிடங்களில் கண்டுபிடிக்கலாம்...எப்படி?
சென்னை: கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றை விரைவாக வீட்டிலிருந்தே சோதனை மூலம் கண்டறியலாமாம்.
பத்தே நிமிடங்களில் அத்தகைய சோதனையைச் செய்து நமக்கு கொரோனா உள்ளதா என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
இச்சோதனையை நமக்கு நாமே செய்துகொள்ள நம்முடைய ஒரே ஒரு துளி ரத்தம் போதும். அச்சோதனை நெகட்டிவ்வாக இருந்தால், நமக்குக் கொரோனா இல்லை எனத் தெரிந்து கொள்ளலாம்.
சோதனையின் முடிவு பாசிட்டிவ்வாக வந்தாலும், உடனே பயந்து பதறத் தேவையில்லை.
உடனடியாக அதை மருத்துவ ஆய்வக சோதனைகளுக்கு அனுப்பி வைக்கலாம்.
ஆய்வக சோதனைகளின் முடிவே இறுதியானது. அதிலும் பாசிட்டிவ் வந்தால்தான் நமக்கு கொரோனா இருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
SensingSelf:
Sensing Self என்ற நிறுவனம் இந்தச் சோதனைகளைச் செய்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு (ICMR) அதை அங்கீகரித்துள்ளது.