சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பியூட்டி பார்லர்" மனைவி.. அடங்காத சந்தேகம்.. கிச்சனுக்கு ஓடிப்போய் கணவன் செய்த பகீர்..!

மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

சென்னை: சண்டை போட்டு கொண்டே இருந்த கணவர், கிச்சனுக்கு ஓடிப்போய் கத்தி எடுத்து வந்து மனைவியின் மார்பு, கழுத்து பகுதியில் குத்தி கொன்றுவிட்டார். எல்லாத்துக்கும் காரணம் நாசமா போன அந்த சந்தேகம்தான்.

செங்கல்பட்டு மாவட்டம் தச்சூர் பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட் லாரன்ஸ்.. 48 வயதாகிறது.. இவர் ஒரு கார்பென்ட்டர்.. அதே பகுதியில் வேலை பார்த்து வருகிறார்.. மனைவி பெயர் சரோவர்ஷா.. 41 வயதாகிறது.. 2 மகள்கள் உள்ளனர்.

Husband killed wife dueto family issue

இவ்வளவு காலம் செங்கல்பட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர்கள், 2 மாசத்துக்கு முன்புதான், மாதவரம் பால்பண்ணை அருகில் ஒரு வாடகை வீட்டிற்கு குடி வந்தனர்.. சரோவர்ஷா செங்குன்றத்தில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

ஆனால், சில நாட்களாகவே, அதாவது பியூட்டி பார்லர் வேலைக்கு போனதில் இருந்தே, இவரது நடத்தை மீது லாரன்சுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.. சம்பவத்தன்றும் இப்படித்தான் சண்டை வந்துள்ளது..

Husband killed wife dueto family issue

இதில் ஆத்திரமடைந்த லாரன்ஸ் கிச்சனுக்கு போய், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து, சரோவர்ஷாவின் மார்பு, கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடி விட்டார்.. சரோவர்ஷா வலியால் அலறி துடிக்கவும், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சரோவர்ஷாவை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர்...

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.. தகவலறிந்து வந்த மாதவரம் பால்பண்ணை போலீசார், சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு வைத்தனர். கல்பாக்கத்தில் மறைந்து கொண்டிருந்த லாரன்ஸையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

English summary
Husband killed wife dueto family issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X