சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏங்க.. குழந்தைக்கு ஸ்கூல்ல பீஸ் கட்டணும்.. மனைவியை கத்தியை எடுத்து குத்தி கொன்ற கணவன்.. சென்னையில்!

மனைவியை கொன்ற கணவன் தப்பி ஓடிவிட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Video : Husband killed wife due to family issue

    சென்னை: மகனுக்கு படிப்பு செலவுக்காக பணம் கேட்ட அகிலாவை கணவன் கத்தியை எடுத்து குத்தி கொலை செய்து விட்டார் .

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே நீலாங்கரை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தனசேகர். இவரது மனைவி அகிலா.

    Husband killed wife near Chennai

    அகிலாவுக்கு 32 வயதாகிறது. கல்யாணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. ஆனால் கல்யாணம் ஆகி 3 மாதத்திலேயே தம்பதிக்குள் சண்டை வந்துவிட்டது.

    அதனால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். அதனால் அகிலா தரமணியில் உள்ள தனது அண்ணன் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கணவரின் வீட்டிற்கு அகிலா சென்றுள்ளார். குழந்தைக்கு ஸ்கூலில் பீஸ் கட்டணும் என்று சொல்லி படிப்பு செலவுக்காக பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தனசேகர் காய்கறி வெட்டும் கத்தியால் அகிலாவின் தலை, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த அகிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    அகிலா கண் முன்னாடியே உயிரிழந்ததை பார்த்ததும், தனசேகர் அங்கிருந்து தப்பிவிட்டார். தகவலறிந்து வந்த நீலாங்கரை போலீசார், அகிலாவின் உடலை கைப்பற்றி தப்பி சென்ற தனசேகரை தேடி வருகின்றனர்.

    English summary
    In Chennai, Husband killed wife due to family issue, and police investigation is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X