சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பார்க்க ரொம்ப அழகு.. உடம்பெல்லாம் டாட்டூ.. அதை கேட்க போய் சண்டை... கத்தியை எடுத்து குத்திய கணவர்!

Google Oneindia Tamil News

சென்னை: "பார்க்க ரொம்ப அழகா இருப்பாள்.. உடம்பெல்லாம் டாட்டூ குத்தி இருக்காள்.. அதை பத்தி கேட்க போய்தான் சண்டை வந்துவிட்டது.. ராத்திரியெல்லாம் விடிய விடிய சண்டை போட்டோம்.. அப்பறம் கத்தி எடுத்து குத்திவிட்டேன்" என்று மனைவியை கொன்ற கணவன் வாக்குமூலம் தந்துள்ளார்.

புழல் பகுதியில் வசித்து வருபவர் வெற்றிவீரன். பாடியில் ஒரு தனியார் அச்சகத்தில் வேலை பார்க்கிறார்.. இவருக்கு சஜினி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

சஜினிக்கு 38 வயதாகிறது... சஜினி ஒரு பியூட்டிஷன்.. ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்த இவர்களின் குடும்ப வாழ்க்கை.. நாளடைவில் சிதைய தொடங்கியது.. வெற்றிவீரனுக்கு ஏகப்பட்ட சந்தேகம் குடிகொண்டது.. இது சம்பந்தமாகவே நிறைய முறை சண்டை வந்துள்ளது.

சமாதானம்

சமாதானம்

ஒரு கட்டத்தில் கணவரை விட்டு சஜினி பிரிந்து சென்றுள்ளார்.. ஆனால், அப்போது உடம்பில் டாட்டூ போட்டு கொண்டுள்ளார் சஜினி.. சிறிது நாளில் மீண்டும் இருவரும் சமாதானம் ஆன சமயம்தான், மனைவி உடம்பில் டாட்டூ இருந்ததை பார்த்து வெற்றிவீரன் ஆத்திரம் அடைந்தார். திரும்பவும் சண்டை.. திரும்பவும் சஜினி பிரிந்து போக.. சில தினங்களுக்கு முன்புதான் சமாதானம் செய்து வெற்றிவீரன் அழைத்து வந்திருக்கிறார்!

தகராறு

தகராறு

இந்த சமயத்தில்தான் மகள்கள் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர்.. வெற்றிவீரனும் சஜினியும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். நேற்றிரவு வழக்கம்போல தகராறு வந்துவிட்டது.. விடிய விடிய சண்டை போட்டுள்ளனர் 2 பேரும்.. விடிகாலை 5 மணி வரைக்கும் சண்டை நிற்கவே இல்லை.

வெற்றிவீரன்

வெற்றிவீரன்

5 மணிக்கு பிறகு, கிச்சனில் இருந்து கத்தியை எடுத்து வந்து சஜினியை தாறுமாறாக குத்தினார் வெற்றிவீரன்.. சஜினியின் கழுத்து, வயிறு, மார்பில் பலமுறை குத்தி கிழித்தார்.. இதில் சஜினி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதை பார்த்து கதறிய வெற்றிவேலன் நேராக புழல் போலீசில் போய் சரண் அடைந்தார். இதைக் கேட்டு அதிர்ந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டனர்.. பக்கத்திலேயே கிடநத் ரத்தக்கறை படிந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

இந்த கொலை குறித்து போலீசாரிடம் வெற்றிவீரன் தந்த வாக்குமூலத்தில், "சஜினி பாக்க ரொம்ப அழகா இருப்பாள்.. சொந்த ஊரு கேரளா.. லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. ஒருமுறை சண்டை போட்டுட்டு என்னை விட்டு போய்ட்டாள்.. அப்போ, உடம்பில் டாட்டூ போட்டுக்கிட்டாள்.. அதை பத்தி இப்போ விசாரிச்சதாலதான் எங்களுக்குள்ள சண்டை வந்தது" என்றார்.

English summary
husband killed his wife due to family issue in chennai and police arrested him
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X