கொரோனா: தமிழக மருத்துவ நிபுணர் குழுவை சேர்ந்த கவுர் தனிமைப்படுத்தப்பட்டார்
கொரோனா: தமிழக அரசின் மருத்துவ வல்லுநர் குழுவை சேர்ந்த பிரப்தீப் கவுர் தனிமைப்படுத்தி கொண்டார்
சென்னை: கொரோனாவில் இருந்து பாதுகாக்க தமிழக அரசின் மருத்துவ வல்லுநர் குழுவைச் சேர்ந்த டாக்டர் பிரப்தீப் கவுர் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஐசிஎம்ஆர் தமிழகப் பிரிவுக்கு துணை இயக்குநராகவும் தமிழக அரசின் கொரோனா தடுப்புக்கான மருத்துவ வல்லுநர் குழு உறுப்பினராகவும் இருக்கிறார் டாக்டர் பிரப்தீப் கவுர். கொரோனா தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டும் வருகிறார்.
சென்னையில் 30 வயதுக்கு கீழ் 3 பேர் கொரோனாவால் இன்று மரணம்- இளைஞர்களே ரொம்ப கவனம்
சென்னையில் கொரோனாவின் பாதிப்பு நேற்று குறைவாக இருந்தது. இது தொடர்பாக சந்தேகங்களை எழுப்பியும் பிரப்தீப் கவுர் பதிவிட்டிருந்தது விவாதத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் தம்மை கொரோனாவில் இருந்து பாதுகாக்க தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் பிரப்தீர் கவுர் பதிவிட்டிருக்கிறார். கொரோனாவால் ஆபத்து அதிகம் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.