நான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்
சென்னை: நான் இஸ்லாமியர்களுக்கு, எதிராக தவறாக பேசியதாக தவறான கருத்து திமுகவினர் பரப்பி வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டுகளை பாருங்கள்:
நான் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிராக பேசியதாக தவறான கருத்தை திமுகவினர் மக்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி வருகின்றனர். சிறுபான்மையினர் வாக்குகளை பெற திமுகவினர் மிகவும் கீழ்த்தரமான எண்ணத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன.
நான் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிராக பேசியதாக தவறான கருத்தை திமுகவினர் மக்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி வருகின்றனர்.
— KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) October 18, 2019
சிறுபான்மையினர் வாக்குகளை பெற திமுகவினர் மிகவும் கீழ்த்தரமான எண்ணத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன.
(1-3)
இஸ்லாமிய மக்களை தூண்டும் விதத்தில் கலவரத்தை ஏற்படும் விதத்தில் கருத்துபரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்னுடைய தொப்புள்கொடி உறவான முஸ்லீம் மக்களை அப்பு என்ற முறையில் உறவு கொண்டாடி வருகிறேன் என்னை பற்றி விருதுநகர் மாவட்ட முஸ்லீம் மக்களிடம் கேட்டு பாருங்கள்.
இஸ்லாமிய மக்களை தூண்டும் விதத்தில் கலவரத்தை ஏற்படும் விதத்தில் கருத்துபரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்னுடைய தொப்புள்கொடி உறவான முஸ்லீம் மக்களை அப்பு என்ற முறையில் உறவு கொண்டாடி வருகிறேன் என்னை பற்றி விருதுநகர் மாவட்ட முஸ்லீம் மக்களிடம் கேட்டு பாருங்கள்
— KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) October 18, 2019
2-3
பின்பு திமுகவினர் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் உங்கள் பொய் பிரச்சாரத்தை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
பின்பு திமுகவினர் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் உங்கள் பொய் பிரச்சாரத்தை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
— KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) October 18, 2019
(3-3)