பெருமை.. என்னுடைய பொறுப்புகள் கூடிவிட்டது.. டாக்டர் பட்டம் பெற்ற முதல்வர் பழனிசாமி பேச்சு!
கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் தன்னுடைய பொறுப்புகள் மேலும் அதிகமாகியுள்ளன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் தன்னுடைய பொறுப்புகள் மேலும் அதிகமாகியுள்ளன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நிகர்நிலை பல்கலைக்கழகமான டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக இன்று பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரியில் நடந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார்.
விழாவிற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார். இதில் முதல்வர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பழனியப்பன், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
என்ன பேச்சு
இதில் பேசிய முதல்வர் பழனிசாமி, கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் என்னுடைய பொறுப்புகள் மேலும் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் ஏட்டுக்கல்வியுடன், வாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டும்.ஏட்டுக்கல்வி மட்டுமே மாணவர்களுக்கு எப்போதும் உதவாது.
மருத்துவ கல்லூரிகள்
புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். விரைவில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். இந்த காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பத்தை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்த வேண்டும். அரசு வழங்கும் இலவச லேப்டாப் இதற்கு உதவியாக இருக்கும்.
எப்படி தொலைக்காட்சி
மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வி படிக்கும் வகையில், புதிய தொழிற்கல்வி நிலையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாம் கல்வியில் புரட்சி செய்துள்ளோம்.
என்ன உயர் கல்வி
மாணவர்கள் இதனால் அதிகமாக உயர் கல்வியில் சேர்கிறார்கள். இதனால் தமிழகம் உயர் கல்வியில் முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து கல்வி வளர்ச்சி மீதுஅதிமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தின் இந்த வளர்ச்சி எனக்கு பெருமை அளிக்கிறது, என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.