ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.. இலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி உருக்கம்!
இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நடிகர் ரஜினிகாந்த் டிவிட் செய்துள்ளார் .
Recommended Video
கொழும்பு: இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நடிகர் ரஜினிகாந்த் டிவிட் செய்துள்ளார் .
இலங்கையில் இன்று அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் மற்றும் 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் 207க்கும் அதிகமானோர் பலியானார்கள்.
கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது. மேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், இன்னொரு தனியார் ஹோட்டல் என்று மொத்தம் 8 இடங்களில் குண்டுவெடித்து இருக்கிறது.
ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
— Rajinikanth (@rajinikanth) April 21, 2019
இதில் 450க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த மோசமான சம்பவம் குறித்து பலரும் டிவிட் செய்து வருகிறார்கள்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு... திட்டமிட்ட அரசியல் சதி...? சந்தேகம் கிளப்பும் சீமான்
இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் டிவிட் செய்துள்ளார். அதில், ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை, என்றுள்ளார்.