பலாத்காரம் செஞ்சுடுவேன் என மிரட்டும் நபர்.. போன் நம்பரை குறிப்பிட்டு குஷ்பு போலீசில் புகார்
சென்னை: நடிகர் குஷ்பு தன்னை ஒருவர் பலாத்காரம் செய்துவிடுவேன் என்று அடிக்கடி மிரட்டுவதாக செல்போன் நம்பரை குறிப்பிட்டு கொல்கத்தா போலீசில் புகார் அளித்துள்ளார்.
நடிகை குஷ்பு டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் பிரபலம் ஆவார். இவரது பல ட்விட்கள் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. விவாதத்தையும் உருவாக்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளராக உள்ள குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் புதன்கிழமை போட்ட ஒரு ட்விட் மிகவும் சர்ச்சையாகி உள்ளது.
"என் வீட்டுக்காரர் கெஞ்சியும் என்னை விடல.. மண்ணெண்ணெய் ஊத்தி எரிச்சிட்டார்".. மனைவி ஷாக் வாக்குமூலம்
கொல்கத்த நபர்
அப்படி என்ன அந்த டுவிட் பதிவில் போட்டுள்ளார் என்று பார்த்ததால், தனக்கு ஒரு நம்பரில் இருந்து நிறைய பலாத்கார மிரட்டல் வருகிறது. சஞ்சய் ஷர்மா என்பவரின் அந்த தொலைப்பேசி அழைப்பு கொல்கத்தாவில் இருந்து வருகிறது. எனவே கொல்கத்தா போலீசிடம் நான் வேண்டுகோள் வைக்கிறேன். சீக்கிரம் அந்த நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
மற்ற பெண்களின் நிலை
அந்த ட்விட் பதிவிலேயே , மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜியை டேக் செய்துள்ள குஷ்பு, எனக்கே இது போன்று நடக்கிறது என்றால், மற்ற பெண்களின் நிலையை நினைத்து பாருங்கள் என்று கூறியுள்ளார். எனக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த நபர் எதனால் அப்படி மிரட்டி இருக்கிறார் என்றால், நான் ஒரு முஸ்லிம் என்பதால் இப்படி மிரட்டி இருக்கிறார்.
குஷ்புவுக்கு மிரட்டல்
அந்த ட்விட்டில் பிரதமர் மோடியை டேக் செய்துள்ள குஷ்பு, இதுதான் ராமர் பூமியா என்று கேள்வி எழுப்பி உள்ளார். குஷ்பு அடிக்கடி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ட்விட் போட்டு வருகிறார். இதை அவரது எதிர் தரப்பினர் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படித்தான் இப்போது குஷ்வுக்கு எதிராக மிரட்டல் வந்துள்ளது. அதற்கு குஷ்பு உடனுக்கு உடன் பதிலடியும் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தான் பலாத்கார மிரட்டல் வந்துள்ளது.
குஷ்பு விளக்கம்
இந்நிலையில் குஷ்பு பலாத்கார புகார் குறித்து இப்படி பப்ளிக்காக போஸ்ட் செய்தது ஏன் என்று ஒருவர் கேட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள குஷ்பு, நான் இதையெல்லாம் பப்ளிக்காக போஸ்ட் பண்றேன் என்று கேட்கிறீர்களே இதனால் என்ன அர்த்தத்தை புரிந்து கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிரட்டல் விடுத்தநபருக்கு ஒரு குடும்பம் இருக்கும். எனவே அந்த நபர் பொதுவெளியில் அசிங்கப்பட வேண்டும் என்று குஷ்பு கூறியுள்ளார்.