தோழர் பினராயி விஜயனை வணங்குகிறேன்.. விஜய் சேதுபதி உருக்கம்!
கஜா புயல் நிவாரணத்திற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவி செய்ய முன்வந்ததற்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: கஜா புயல் நிவாரணத்திற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவி செய்ய முன்வந்ததற்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இரண்டு வாரம் முன் வீசிய கொடூர கஜா புயலால் சொல்ல முடியாத இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்ட மக்கள் பேரிழப்பை சந்தித்து இருக்கிறார்கள்.
கஜா புயல் சேதத்தில் தமிழகத்திற்கு உதவ கேரளா அரசு கரம் கொடுத்து உள்ளது. தமிழகத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.
10 கோடி ரூபாய் பணம், உணவு, உடை ஆகியவை வழங்குவதாகவும், பணியாளர்கள் உதவியை அளிக்க உள்ளதாகவும் கூறினார். இதற்காக அவர் தமிழிலேயே டிவிட் செய்து இருந்தார்.
கேரள முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு பலர் நன்றி தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் புயலால் பாதித்த தமிழகத்திற்கு உதவிய கேரள அரசுக்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார்.
புயல் தாக்கிய அடுத்த நாளே நிவாரணப் பொருட்களை அனுப்பியதோடு இன்று தமிழர்களின் துயரை துடைக்கும் விதத்தில் தற்போது 10 கோடி ரூபாய் நிதியையும் அறிவித்த கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களின் சகோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் வணங்குகிறேன்...
— VijaySethupathi (@VijaySethuOffl) November 29, 2018
அவர் தனது டிவிட்டில், புயல் தாக்கிய அடுத்த நாளே நிவாரணப் பொருட்களை அனுப்பியதோடு இன்று தமிழர்களின் துயரை துடைக்கும் விதத்தில் தற்போது 10 கோடி ரூபாய் நிதியையும் அறிவித்த கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களின் சகோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் வணங்குகிறேன், என்றுள்ளார்.
கேரளாவில் சமீபத்தில் வெளியான 96 படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் பிரேமம் கொண்டாடப்பட்டது போலவே கேரளாவில் 96 வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.