கட்சி பதவியை உதறியாச்சு.. அடுத்து என்ன? தோப்பு வெங்கடாசலம் பரபர!
Recommended Video
சென்னை: கட்சிப்பதவியில் இருந்து விலகியுள்ள எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் தோப்பு வெங்கடாசலம். இவருக்கும் அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
அண்மையில் அமைச்சர் கருப்பண்ணன் திமுகவுக்கும் அமமுகவுக்கும்தான் வேலை செய்கிறார் என கூறி குண்டை தூக்கி போட்டார் தோப்பு வெங்கடாசலம். இது கட்சிக்குள் பூதாகரமானது.
ஊரெல்லாம் ஒரு மாதிரியான நிலவரம்.. தேமுதிகவினரின் மனதில் மட்டும் கவலை கலவரம்!
நேற்று ராஜினாமா
தோப்பு வெங்கடாசலத்தின் பேச்சால் அதிமுக தலைமை மட்டுமின்றி தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் தன்னிடம் இருந்த கட்சி பதவியான அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் நேற்று விலகினார்.
பொறுமையா இருங்கள்
இதற்கான ராஜினாமா கடிதத்தை எம்.எல்.ஏ.தோப்பு வெங்கடாச்சலம் சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திது வழங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தோப்பு வெங்கடாசலம் எனது சொந்த முடிவு என்று கூறிவிட்டு சென்றார்.
பதவி அவசியம் இல்லை
இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கட்சிக்கு உழைக்க பதவி ஒன்றும் அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். அதிமுக தொண்டனாக இருந்து பணியாற்றுவேன் என்றும் தோப்பு வெங்கடாசலம் கூறியுள்ளார்.
விலகல் - பரபரப்பு
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெரும் சரிவை சந்திக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தது. இந்நிலையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் கட்சி பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.