முதலமைச்சருக்கு நாளை பிறந்தநாள்... முதல் ஆளாக வாழ்த்துக்கூறிய இடிமுரசு இஸ்மாயில்
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் அவருக்கு தமிழக முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது;
இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று வழி நடத்தி வருவதை பாராட்டுகிறேன். முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து மிகச் சுறுசுறுப்பாக பணியாற்றி விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திட பாடுபட்டு வருகிறார்.
கொரானா ஊரடங்கில் தமிழக மக்கள் பட்டினியால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 வழங்கியதோடு விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்குகிறார். அம்மா உணவகங்களிலும் சமுதாய நல கூடங்களிலும் தினந்தோறும் 3 வேளை உணவுகளை 9 இலட்சம் பேர் களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்.
ஹேக் செய்து திருடுகிறார்கள்.. கொரோனா ஆராய்ச்சியில் சீனா "சைபர் வார்".. அமெரிக்கா ஷாக்கிங் புகார்!
ஜெயலலிதா வழியில் அயராது உழைக்கும் அண்ணன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்வரும் மே 12ந்தேதி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு இடிமுரசு இஸ்மாயில் முதல் ஆளாக முதல்வருக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.