பரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்தியானந்தா.. ஜலகண்டேஸ்வரர் கோவில் லிங்கத்தை கடத்தியதாக போலீஸில் புகார்
லிங்கத்தை நித்யானந்தா திருடி சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது
Recommended Video
சென்னை: பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நித்யானந்தா சாமியார் மீது, அடுத்த புகார் கிளம்பி உள்ளது. மூலவர் சிலையை இவர் திருடிச் சென்றுள்ளதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த சாமியார் நித்யானந்தா, கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவரது பேச்சுக்கள் அடிக்கடி யூடியூப்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தன்னுடைய கட்டளையை கேட்டுதான் சூரியனே 40 நிமிடங்கள் தாமதமாக உதித்தது என்று சொல்லி கிலியை தருவார்.
சமீபத்தில்கூட, மேட்டூர் அணையின் நீருக்குள் உள்ள பழமையான சிவன் கோவிலின் மூல லிங்கம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார். அதுமட்டுமில்லை.. அந்த கோவிலை போன ஜென்மத்தின் போது தானே கட்டியதாகவும் சொல்லி ஒரு வீடியோ வெளியிட்டார்.
தலை முடியை பிடிச்சு இழுத்தாங்க.. என் மேல கை வச்சாங்க.. மாணவர்களிடம் சிக்கி மீண்ட மத்திய அமைச்சர்!
இந்நிலையில், நித்யானந்தா மீது ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலவாடி வேலுசாமி, சக்திவேல் ஆகியோர், பாலவாடி ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான லிங்கத்தை நித்யானந்தா திருடி சென்றதாக கொளத்தூர் போலீசில் புகார் தந்துள்ளனர். மேலும் அவர் திருடிய லிங்கத்தை மீட்டு தரும்படியும் அவர்கள் இருவரும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.