சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் சொன்னது நடந்துச்சு.. தனிக்கட்சி தொடங்கினால்.. ரஜினியை எச்சரிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: டிடிவி தினகரனுக்கு ஏற்பட்ட நிலைதான் தனிக்கட்சி தொடங்கினால் ரஜினிக்கும் ஏற்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை, அடையாறில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தைவான் நாட்டுக்கு திருவள்ளுவர் சிலையை அனுப்பும் விழா நடந்தது அதில் கலந்துகொண்டு அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் ''டிடிவி தினகரனுக்கு ஏற்பட்ட நிலைதான் தனிக்கட்சி தொடங்கினால் ரஜினிக்கும் ஏற்படும்.

if rajini start political party, will not get vote bank : says jayakumar

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வந்தால் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவதே கடினம். நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.. டிடிவி தினகரன் கட்சி தொடங்கி 5% வாக்குகள் பெறுவார் என்றேன். அதேபோல 5% வாக்குகளை மட்டுமே டிடிவி தினகரன் பெற்றார்.

கமல்ஹாசனும் நான் சொன்னது போலவே 7% வாக்குகளைப் பெற்று இருந்தார். ஆனால் நான் ரஜினி குறித்துக் கூறவில்லை. ஆனால் பொதுவாகவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எல்லோர் மத்தியிலும் 'நாம் கட்சி ஆரம்பிக்க வேண்டும்' என்று அரசியல் ஆசை வந்துள்ளது. விரும்புபவர்கள் தாராளமாகக் கட்சி ஆரம்பியுங்கள், அவர்களுக்கு எங்களது வாழ்த்துகள். அதே நேரத்தில் அவர்களால் 6 முதல் 7 சதவீத வாக்குகளை மட்டுமே பெறமுடியும் என்றார்.

ஒபிஎஸ் மகன் ரவீந்திராத் இந்து முன்னணி ஊர்வலத்தில் பேசியது குறித்தகேள்விக்கு, அதிமுக அனைத்து சாதி, மதத்தினருக்கான கட்சி. இதுதான் எங்களுடைய நிலை. ஓ.பி.ரவீந்திரநாத் கூறியது அவரின் கருத்தாக இருக்கலாம்'' என ஜெயக்குமார் கூறினார்.

English summary
miister jayakumar warns rajini, if he start political party, will not get vote bank
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X