நினைத்தது போல் நடந்தால்… சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவேன்… ஹெச்.ராஜா பேச்சு
சென்னை: தலைமை அனுமதி அளித்தால் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவேன் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா குறிப்பிட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.
கூட்டணி கட்சியில் யாருக்கு எந்த தொகுதி என்பது முக்கியமல்ல என குறிப்பிட்ட அவர், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தான் இலக்கு எனவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
திமுக கூட்டணி என்பது கூட்டணியே அல்ல எனவும், பாஜக கூட்டணிக்கும் திமுகவுக்கு மட்டுமே தான் போட்டி எனவும் குறிப்பிட்டார்.
மாஸ்டர் பிளான்.. 7 தொகுதிகளில் 6ல் திமுகவுடன் பாமகவை மோத விட்ட அதிமுக...!
இதேபோல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக நிர்வாகிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 40 தொகுதிகளிலும் தங்கள் கூட்டணி வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, ஸ்ரீவில்லிப்பத்தூர் ஆண்டாள் கோவிவில் மகாலட்சுமி வீற்றிருக்கும் தாமரை கோலம் டி.எஸ்.பி உத்தரவால் அழிக்கப்பட்டுள்ளது இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடும் வரம்பு மீறிய செயல் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.