சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை ஐஐடி மாணவர்கள் ஃபாத்திமா தற்கொலைக்கு நீதி கோரி போராட்டம்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை ஐஐடி மாணவி தற்கொலை... அதிர வைத்த செல்போன் ஆதாரம்

    சென்னை: சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரளா மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி அக்கல்வி நிறுவன மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

    சென்னை ஐஐடியில் படித்த கேரளா மாணவி ஃபாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். தமது தற்கொலைக்கு காரணம் சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியர் உள்ளிட்ட மூவர்தான் என ஃபாத்திமா மரண வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார்.

    IIT-M Students hold protest on Fathimas death

    இதையடுத்து ஃபாத்திமாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், கேரளா முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார். இதனடிப்படையில் போலீசார் சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்டோரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஃபாத்திமா லத்தீபின் மரணத்துக்கு நீதி கோரி பல்வேறு மாணவர் அமைப்புகள் சென்னை ஐஐடி வளாகத்தின் முன்பாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது சென்னை ஐஐடி மாணவர்களும் ஃபாத்திமா லத்தீபின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம் நடத்தினர்.

    ஐஐடி வளாகத்துக்குள் ஃபாத்திமா மரணத்துக்கு நீதி கோரும் பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவியர் முழக்கங்களை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    English summary
    IIT Madras students hold protest inside campus and have demmanded that fair investigation into Fathima's death.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X