சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி

இளையராஜா- 75 பாராட்டு நிகழ்ச்சியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விருப்பப்படி நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: இளையராஜா- 75 பாராட்டு நிகழ்ச்சியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விருப்பப்படி நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

தமிழ் சினிமா உலகில் இசையின் அடையாள இளையராஜா என்று கூறலாம். 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்து இருக்கும் இளையராஜாவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விழா எடுக்க திட்டமிட்டு இருந்தது. ஐந்து முறை தேசிய விருது வாங்கிய இவரை கவுரவிக்க இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த விழா இசையராஜா-75 என்ற பெயரில் மிக பிரம்மாண்டமாக நடப்பதாக இருந்தது. சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இதற்கான அழைப்பிதழ் கூட அடிக்கப்பட்டு பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இதை அடுத்து விழா நடப்பதாக இருந்த பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த விழா முறைப்படி தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதியுடன் நடக்கவில்லை. விஷால் தரப்பு யாருடனும் ஆலோசிக்காமல் இதை நடத்துகிறார்கள் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.

இளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி! இளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி!

 ஆனால் வழக்கு

ஆனால் வழக்கு

சென்னை ஹைகோர்ட்டில் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் இது தொடர்பாக வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கடந்த ஒரு வாரமாக விசாரிக்கப்பட்டது. நீதிபதி கல்யாண சுந்தரம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

பதில்

பதில்

சங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. இதனால் நிகழ்ச்சியை ஒத்திவைக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது. இதுகுறித்து பதில் அளிக்கும்படி தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஹைகோர்ட் சம்மன் அனுப்பியது. இதில், அனைத்து தரப்பிடமும் விவாதித்த பின்பே விழா நடத்துவதாக தயாரிப்பாளர் சங்கம் பதில் அளித்து இருந்தது.

 என்ன தீர்ப்பு

என்ன தீர்ப்பு

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி கல்யாண சுந்தரம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். அதன்படி இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இளையராஜா- 75 பாராட்டு நிகழ்ச்சியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விருப்பப்படி நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

 கண்டிப்பாக நடக்கும்

கண்டிப்பாக நடக்கும்

இதனால் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான தடை அகன்று இருக்கிறது. இந்த விழா இதனால் திட்டமிட்டபடி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சினிமா துறையினர் மட்டுமில்லாமல் மக்களும் அதிக அளவில் எதிர்பார்த்த நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ilayaraja 75: Can't put stay on the function, Madras High Court shows green signal to Producers council.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X