சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த பொண்ணு எனக்குத்தான்.. கள்ளக்காதலர்களிடையே கலவரம்.. ஆணுறுப்பை வெட்டி கொலை.. வேலூர் அருகே

Google Oneindia Tamil News

சென்னை: பெண்ணுக்காக கள்ளக்காதலர்கள் நடுவே ஏற்பட்ட மோதலில், கள்ளக் காதலர்களில் ஒருவர் கூலிப்படையினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள, ஏ.கே.மோட்டூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் இருந்தனர். ஆனால், மகிழ்ச்சியாக சென்றிருக்க வேண்டிய அவர் வாழ்க்கையில், கணவரை இழந்த கைம்பெண், முருகேஷ்வரி என்பவர் ரூபத்தில் புயல் வீசத் தொடங்கியது.

முருகேஷ்வரிக்கு இன்னொரு பெயர் குட்டியம்மாள். கல்லூரியில் படிக்கும், அளவுக்கு வயது வந்த இரு மகன்கள் அவருக்கு உண்டு.

ஆசை நாயகி

ஆசை நாயகி

ஆனால், கணவரை இழந்த முருகேஷ்வரி, ஊரில் இருப்போரையெல்லாம் கணவராக நினைக்க ஆரம்பித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், சிவகுமாரை தனது ஆசை நாயகனாக்கிக் கொண்டார் முருகேஷ்வரி. அரசல் புரசலாக ஆரம்பித்த உல்லாசம், பிறகு வீட்டிலேயே சிவகுமாரை தங்க வைத்து உபசரிக்கும் அளவுக்கு மாறிப்போனது.

புது திருப்பம்

புது திருப்பம்

நல்லா போய்க் கொண்டிருந்த கள்ளக்காதலர்களின் வாழ்க்கையில், மற்றொரு ட்விஸ்ட். முருகேஷ்வரி ஏற்கனவே புதுப்பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவருடன் கள்ளக்காதல் செய்து களித்தவராகும். அப்படியிருக்க, சிவகுமார், தட்டிக் கொண்டு போய்விட்டதால், விட்டுவிடுவாரா? அவர் கோபம் முருகேஷ்வரி மீது போனது. ஆசை நாயகி என நினைத்தால் இப்படி துரோகம் செய்துவிட்டாரே என பொறுமினார்.

ரயில் நிலையம்

ரயில் நிலையம்

எனவே, முருகேஷ்வரியையும், சிவகுமாரையும் கொலை செய்ய முடிவு செய்தார் பழனி. இந்த தகவல் அறிந்ததும், சிவகுமார் அச்சமடைந்தார். முருகேஷ்வரியை, நைசாக திருப்பூரில் தலைமறைவாக அனுப்பிவைக்க முடிவு செய்தார். இதற்காக, முருகேஷ்வரியை ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு சிவக்குமார் டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

கொடூரம்

கொடூரம்

அப்போது ஆளில்லாத இடத்தில் வழி மறித்த பழனி அனுப்பிய, கூலிப்படையினர், சிவகுமாரை பைக்கிலிருந்து கீழே தள்ளி மிளகாய் பொடியைத் தூவினர். அவர் நிலைதடுமாறியபோது, தலை, கை, முகம் என சரமாரியாக சிவகுமாரை வெட்டினர். பிறகு, சிவகுமாரின் மர்ம உறுப்பை அறுத்து எடுத்தனர். கல்லையும் சிவகுமார் மீது தூக்கிப்போட்டு, கொடூரமாக கொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
Woman illicit affair leads to murder a man near Vellore in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X