தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகரில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை பெய்யக் கூடும். கன்னியாகுமரி, மதுரை, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
Very Heavy rainfall has been reported at Atiramapattinam (13.5cm) of Tamil Nadu. Heavy rainfall has been reported over Ariyalur (10cm), Nagapattinam (8 cm) and Karaikal (6.3 cm) during 0830 hrs IST of 11th Jan to 0530 hrs IST of 12th January. pic.twitter.com/Zp7sxBrMIm
— India Meteorological Department (@Indiametdept) January 12, 2021
கடந்த 24 மணிநேரத்தில் அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 13.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அரியலூரில் 10 செ.மீ, நாகையில் 8 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.