சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை மையம் குட் நியூஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணாமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Recommended Video

    Tamilnadu Weather Update : இன்றும் நாளையும் தமிழகத்தில் செம மழை இருக்கு..

    கோடை வெயில் ஒரு பக்கம் அதிகமாக இருந்த போதிலும் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் கோவை, தேனி. விழுப்புரம். தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    புதுச்சேரியில் கோடை மழை.. கத்திரி வெயிலுக்கு நடுவே குளிர்ச்சியடைந்த மக்கள்புதுச்சேரியில் கோடை மழை.. கத்திரி வெயிலுக்கு நடுவே குளிர்ச்சியடைந்த மக்கள்

    வெப்பச்சலனத்தால் மழை

    வெப்பச்சலனத்தால் மழை

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணாமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் என 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    வெப்ப நிலை அதிகம்

    வெப்ப நிலை அதிகம்

    சென்னையைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.. சென்னை நகரில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

    சின்னக்கல்லாரில் 7 செ.மீ

    சின்னக்கல்லாரில் 7 செ.மீ

    தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார் 7 செ.மீ மழையும், வால்பாறையில் 6 செ.மீ மழையும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் கோவை மாவட்டம் சின்கோனாவில் 5 செ.மீ மழையும், சோலையாரில் 4 செ.மீ மழையும், தேனி மாவட்டம் பெரியாறு, புதுக்கோட்டை மாவட்டம் குடியியான்மலையில் 3 செ.மீ மழையும், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

    கடலுக்கு செல்ல வேண்டாம்

    கடலுக்கு செல்ல வேண்டாம்

    வரும் ஜூன் 18 ஆம் தேதி கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதாலும், ஜூன் 18, 19 தேதிகளில் குஜராத் கடற்பகுதிகளில் பேரலையானது 4 செ.மீ வரை எழும்பக்கூடும் என்பதாலும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இன்றும், நாளையும் செல்ல வேண்டாமென அறிவுறுத்தி உள்ளது.

    English summary
    weather forecast : heavy rain may lashed over Coimbatore, Nilgiris, Theni, Thanjavur, Thiruvarur, Nagapattinam, Pudukkottai, Sivagangai, Ramanathapuram, Thiruvallur and Villupuram districts of tamil nadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X