சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட அறிக்கை:

IMD issues heavy rainfall warning for 3 Districts in TN

வடக்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தின் கடற்கரையை ஒட்டி உருவாகியுள்ளது காற்றழுத்த தாழ்வு பகுதி. இது அதேபகுதியில் நீடிக்கிறது. மேலும் அடுத்த 48 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுப்பெறும்.

இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பல மவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

அடுத்த 4 நாட்களுக்கு அதாவது நாளை முதல் 17-ந் தேதி வரை நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்! கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்!

வங்க கடலில் இன்று முதல் 3 நாட்களுக்கு பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும். இதேபோல் அரபிக் கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளுக்கு மீன்வர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
IMD had issued heavy rainfall warning for 3 Districts in Tamilnadfu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X