சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தென்மாநிலங்களில் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு... வந்திடுச்சு புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி

Google Oneindia Tamil News

Recommended Video

    IMD Predicts heavy rainfall in Kerala

    டெல்லி: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய காரணத்தால் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தென்மேற்கு பருவ மழை தீவிரமாக இருந்த காரணத்தால் கடந்த ஆக்ஸ்ட் 1 ம் தேதி முதல் 12ம் தேதி வரை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதி கனமழை விழுந்தது. இதன் காரணமாக மிகப்பெரிய அளவில் சேதமும் ஏற்பட்டது. அதன்பிறகு மழையின் தாக்கம் படிப்பபடியாக குறைந்ததால் வெள்ளமும் வடிந்து வருகிறது.

    IMD Predicts heavy rainfall in south india

    இந்நிலையில் வடக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேற்கு திசைக் காற்றின் சாதக போக்கின் காரணமாக அடுத்து வரும் நாட்களில் தென்மாநிலங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், குஜராத் மாநிலத்துக்கும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது .தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக கூறயுள்ளது, கோவை, தேனி, மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    English summary
    IMD Predicts heavy rainfall in Kerala, Rajasthan and karnakata and tamilnadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X