மருத்துவ மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு தீவிரம்.. நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து ஷாக் தகவல்
Recommended Video
சென்னை: நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தைத் தொடர்ந்து அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களின் ஆணவங்களை சரி பார்ப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னையைச் சேர்ந்தவர் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் செய்து தேர்வு எழுதியதாக கல்லூரி முதல்வருக்கு ஈமெயிலில் புகார் வந்தது.
இதையடுத்து விசாரணை நடத்திய போது அந்த மாணவரின் தந்தை, தாய் ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாக தெரிவித்தனர்.
புகைப்படம் வித்தியாசம்
இதையடுத்து கல்லூரியில் படிக்கும் மாணவர், தேர்வு எழுதிய மாணவர் ஆகியோரின் புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்ததில் வித்தியாசம் இருந்தது. இதனால் உதித் சூர்யாவின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இதற்கிடையில் மாணவர் உதித் சூர்யா மற்றும் தேர்வு எழுதியதாக கூறப்படும் மாணவரும் தலைமறைவாகினர்.
ஆள்மாறாட்டம் உறுதி
இதைடுத்து தீவிர விசாரைணைக்கு பின்னர் மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதி என மருத்துவக் கல்லூரி டீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டீன் ராஜேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபுவிடம் ஒப்படைத்தனர்.
மாணவர்களை தேடும் போலீஸ்
இதையடுத்து தலைமறைவாக உள்ள மாணவர் உதித் சூர்யா மற்றும் தேர்வு எழுதி மாணவர் உள்படஇரண்டுபேரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் சரிபார்ப்பு
இதற்கிடையே தேனி மருத்துவக்கல்லூரியில் நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தைத் தொடர்ந்து அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களின் ஆணவங்களை சரி பார்ப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தேர்வு எழுதிய மாணவர்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மும்பையில் தேர்வு எழுதியவர், சென்னையில் நடந்த மருத்துவ கவுன்சிலிங்கிலும் கலந்து கொண்டார் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.