ஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது?.. பதற வைக்கும் தலைநகரம்!
Recommended Video

சென்னை: ஒரே நாளில் 5 கொலைகளை கண்டு சென்னைவாசிகள் நடுங்கி கிடக்கிறார்கள்.
ஓட்டேரி பகுதியில் 15 நாளைக்கு முன்பு ஜெயிலுக்குபோய் திரும்பி வந்தவர்தான் குமரன் என்ற 22 வயது இளைஞர். நண்பர்களுடன் சேர்ந்து சூதாடிக்கொண்டிருந்தபோது, அதில் ஏற்பட்ட தகராறால் சக நண்பர்கள் அரிவாளால் வெட்டியே அவரை சாய்த்தனர்.
அதேபோல, ஆவடியில் ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்தை சொந்த குடும்பத்தினரே கட்டை, கடப்பாரை வைத்து தாக்கி கொன்றனர். அவர்கள் வீட்டு மின்மாற்றியை யாரோ மாற்றி வைத்துவிட்டார்களாம். இதுதான் பிரச்சனை. இதற்கு ஒருகொலை.

யார் காரணம்?
அதேபோல, அண்ணாநகரை சேர்ந்த ஏசுராஜன் என்ற 70 நபரை, அவரது மருமகள் சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம், யார் காரணம் என இனிமேல்தான் உண்மைகள் தெரியவரும்.

வைஷ்ணவா காலேஜ்
மதியம் 12 மணிக்கு வைஷ்ணவா காலேஜில் அருகில் நடந்து கொண்டிருந்த சூளைமேடு ரவுடி குமரேசனை 3 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றுள்ளது. பொதுமக்களே இதை பார்த்து அலறி அடித்து ஓடியிருக்கிறார்கள்.

பெண்ணின் உடல்
அதேபோல, பெருங்குடி குப்பைமேட்டில் இளம்பெண்ணின் உடல் பாகங்கள் தனித்தனியாக பார்சல் செய்யப்பட்டு கிடப்பதை போலீசார் கண்டெடுத்திருக்கிறார்கள்.

குற்றவாளிகள்
இவ்வளவும் ஒரேநாளில் நேற்று சென்னையில் நடந்துள்ளது. இந்த கொலைகளுக்கான காரணங்களையும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் போலீசார் பிடித்து ஜெயிலில் போடுவது ஒருபக்கம் இருந்தாலும், இது ஏற்றுக் கொள்ள கூடியதா? தலைநகரமான சென்னையில் இது நடக்கலாமா?

கொலைநகரம்
நகரெங்கும் போலீசார்களும், சிசிடிவி காமிராக்கள் என வைத்தும் என்ன பிரயோஜனம்? மக்களுக்கு என்ன பாதுகாப்பு? ஒரே நாளில் இத்தனை கொலைகள் என்பது சென்னைவாசிகளுக்கு நடுக்கத்தைதான் தருவதுடன் தலைநகரம் இனியும் கொலைநகரமாக மாறிவிடக்கூடாது என்பதே அவர்களின் உடனடி கோரிக்கையாக எழுந்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications