சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சரக்கு மப்பில் டிரைவிங்... புத்தாண்டு தினத்தில் 200 -க்கும் மேற்பட்டோர் மீது வழக்குபதிவு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 263 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெரினா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆரவாரமாக புத்தாண்டை வரவேற்றனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் இளைஞர்கள் நடனமாடியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்தும் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடினர். சில இடங்களில் நடிகர், நடிகைகளின் மேடை நடனங்களும் இடம்பெற்றிருந்தன.

In the New Year Day, over 200 cases were filed

மேலும், சென்னையில் உள்ள பல்வேறு பூங்காக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மனமகிழ் மன்றங்களில் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். கேக் வெட்டியும் புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்தநிலையில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 263 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல், இருசக்கர வாகனத்தில் விதிகளை மீறி பயணித்ததாக 233 வழக்குகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 33 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல், மும்பையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 455 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 1114 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது

English summary
263 drunk driving challans and 33 challans for speeding were issued in chennai from 31st December 2018 till 6 am today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X