ஐடி ரெய்டில் சிக்கிய 'துண்டு சீட்டு'.. அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாருக்கு சம்மன்
சென்னை: எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அமைச்சர் உதயக்குமார் அறையில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பணம் கடத்தி வரப்பட்டுள்ளதாக வந்த தகவல் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள்.
குறிப்பாக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் அறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த அறையில் நேற்று இரவு இரண்டு மணி நேரம் நடந்தது.
இந்த சோதனையில் அமைச்சர் உதயக்குமாரின் அறையில் இருந்து பணம் ஏதுவும் கைப்பற்றப்படவில்லை. அதேநேரம் அவரது பைகளில் இருந்த சில துண்டுச்சீட்டுகளைகைப்பற்றியுள்ளனர்.
விஜயகாந்த்தா இது.. குழந்தையாக மாறி காட்சி தந்த "கேப்டன்".. ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த மக்கள்!
இந்நிலையில் நேற்று நடந்த சோதனையின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட சில துண்டுச்சீட்டுகள் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.