கொரோனா தொற்று- இந்தியா மிக முக்கியமான கட்டத்தில் இன்று நுழைகிறது: ப. சிதம்பரம்
சென்னை: கொரோனா தொற்று பரவுவதில் இந்தியா இன்று மிக முக்கியமான கட்டத்தில் நுழைகிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா பரவுவதில் இந்தியா இன்று மிக முக்கியமான கட்டத்தில் நுழைகிறது.
எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்ததை எல்லோரும் வரவேற்கிறோம். எல்லா வல்லுநர்களும் ஒரு முகமாக ஏற்றுக் கொள்ளும் கருத்து: மிகப் பரவலாக, மிக அவசரமாக, மிக வேகமாக பரிசோதனை (testing) செய்ய வேண்டும். இதனை அரசு இன்றே தொடங்கவேண்டும். '
உலகிலேயே முதல்முறை.. நியூயார்க்கில் பெண் புலிக்கு கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி.. எப்படி பரவியது?
எல்லா மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு இந்தப் பரவலான அதிகமான பரிசோதனைத் திட்டத்தை இன்றே தொடங்கவேண்டும். இவ்வாறு ப. சிதம்பரம் கூறியுள்ளார்.