சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களை சிரமப்படுத்த வேண்டாம்... இ-பாஸ் முறையை ரத்து செய்க - இந்திய தவ்ஹீத் ஜமாத்

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசே இ-பாஸ் வேண்டாம் எனக் கூறிய பிறகும் அதனை தமிழக அரசு தொடர்வது ஏன் என இந்திய தவ்ஹீத் ஜமாத் கேள்வி எழுப்பியுள்ளது.

வெளிப்படைத் தன்மை இல்லாத இ-பாஸ் முறை ஊழலுக்கு வழிவகுப்பதால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

india thowheed jamath demands, cancel e-pass system

இது தொடர்பாக இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் முகமது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

''கொரோனா தொற்றுப் பரவலை சாக்கு வைத்து தமிழக அரசு பொதுப் போக்குவரத்தை முடக்கி வைத்திருக்கிறது.மேலும் அவசர காலத் தேவைகளுக்கு தனியார் வாகனங்களில் ஊரு விட்டு ஊர் செல்ல இ- பாஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதித்துள்ளது.

சுமார் நான்கைந்து மாதங்கள் இந்த இ- பாஸ் முறை நடப்பில் இருந்து வருகிறது.இந்த இ-பாஸ் எடுப்பதும் அவ்வளவு எளிய காரியம் இல்லை.இணைய வழியில் தான் பெற முடியும் என்றாலும் இணைய தொடர்போ,பழக்கமோ இல்லாதவர்கள் பாஸ் எடுப்பது சிரமமாக இருக்கிறது.விண்ணப்பங்கள் பலமுறை நிராகரிக்கப்படுகிறது.அதே நேரம், தமிழகம் முழுவதும் இ-பாஸ் வழங்குவதில் தாராளமாக முறைகேடுகள் நடந்து வருகிறது.இ-பாஸ் வழங்குவதில் வெளிப்படைத் தன்மையும் இல்லை.

நீர்வரத்து குறைந்த போதிலும் 100 அடியுடன் கடல் போல் காட்சி அளிக்கும் பவானிசாகர் அணைநீர்வரத்து குறைந்த போதிலும் 100 அடியுடன் கடல் போல் காட்சி அளிக்கும் பவானிசாகர் அணை

இ-பாஸ் கட்டாயமில்லை என்று மத்திய அரசே அறிவித்திருக்கும் போது தமிழக அரசு இ-பாஸை கட்டாயமாக்கி இருப்பது மக்களை சிரமத்திற்குள்ளாக்குகிறது.எனவே,ஊழலுக்கு பெரிய அளவில் இடமளித்திருக்கும் இ-பாஸ் முறையை முழுமையாக ரத்து செய்து விட்டு மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு தடையின்றி பயணம் செய்ய தமிழக அரசு வகை செய்ய வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்துகிறது''.

English summary
india thowheed jamath demands, cancel e-pass system
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X