சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா சீனா டிரேட் வார்.. பெரிய அளவில் பலன் அடையும் சென்னை.. அதிர்ஷ்டம் அடிக்க போகிறது!

அமெரிக்கா சீனா இடையில் நடந்து வரும் வர்த்தக போர் காரணமாக சென்னை ஒரு வகையில் பெரிய பலன் அடைய போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

Recommended Video

    USA Vs CHINA: அமெரிக்காவை எதிர்க்க துணிந்த சீனா.. இன்னும் ஆபத்து இருக்காம்- வீடியோ

    சென்னை: அமெரிக்கா சீனா இடையில் நடந்து வரும் வர்த்தக போர் காரணமாக சென்னை ஒரு வகையில் பெரிய பலன் அடைய போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே உலக நாடுகளின் வரி விதிப்பு முறை குறித்து நிறைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார். அவர் அதிகம் குற்றச்சாட்டு வைக்கும் இரண்டு நாடுகள் சீனாவும், இந்தியாவும்தான்.

    ஆனால் இந்தியா எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா மீதான வரியை குறைத்துவிடும். ஆனால் சீனா வரியை குறைக்க கொஞ்சம் கூட தயாராக இல்லை.

    பிரதமர் அலுவலகத்தில் ரூ. 76 லட்சம் பாக்கி.. கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு என நோட்டீஸ்பிரதமர் அலுவலகத்தில் ரூ. 76 லட்சம் பாக்கி.. கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு என நோட்டீஸ்

    என்ன சொல்கிறது

    என்ன சொல்கிறது


    அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 2.5% வரிதான் விதிக்கப்படுகிறது. ஆனால் சீனாவில் அமெரிக்க பொருட்களுக்குத்தான் அதிக அளவில் 25% வரி விதிக்கப்படுகிறது. இதை டிரம்ப் கடுமையாக குற்றஞ்சாட்டி வந்தார். இதற்கு எதிராக அவர் தொடர்ச்சியாக நிறைய நடவடிக்கைகளை எடுத்தார்.
    இதுதான் வர்த்தக போரின் தொடக்கமாக அமைந்தது.

    என்ன தொடக்கம்

    என்ன தொடக்கம்

    இதனால் சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதலாக 10% வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக சீனா அமெரிக்காவின் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. இரண்டு நாட்டிலும் எதிரி நாட்டு எலக்ட்ரானிக் மற்றும் ஆட்டோமொபைல் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது.

    சிக்கல்

    சிக்கல்

    இதனால் உலகம் முழுக்க இருக்கும் எலக்ட்ரானிக் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெரிய சிக்கலை சந்தித்துள்ளது. இந்த வரி விதிப்பு காரணமாக சீனாவில் அமெரிக்க நிறுவனங்களால் இயங்க முடியவில்லை. அதேபோல் அமெரிக்காவில் சீனாவின் நிறுவனங்களால் இயங்க முடியவில்லை.

    வர வைக்கிறது

    வர வைக்கிறது

    இதனால் பாதிக்கப்படும் நிறுவனங்களை இந்தியாவில் கடை விரிக்க அழைக்க உள்ளது மத்திய அரசு. இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. ஆப்பிள்,பாக்ஸ்கார்ன், விஸ்டர்ன் கார்ப் ஆகிய நிறுவனங்களுடன் இதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் ஆப்பிள் விரைவில் இந்தியாவில் தனது அலுவலகத்தை தொடங்க வாய்ப்புள்ளது.

    என்ன கூகுள்

    என்ன கூகுள்

    இதில் ஆப்பிள் நிறுவனம் பெரும்பாலும் பெங்களூர் அல்லது ஹைதராபாத்தில் தனது நிறுவனத்தை தொடங்கும். அதே சமயம் கூகுள் சீனாவில் நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. அவர்களிடம் பேசி, கூகுள் நிறுவனத்தை தென்னிந்தியாவில் சென்னை அல்லது அமராவதிக்கு கொண்டு செல்லும் திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    எப்போது

    எப்போது

    சென்ற வாரமே சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களுடன் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. ஆனால் அடுத்த வாரம் வரை இந்த பேச்சுவார்த்தை நடக்கும். அதன்பின் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முக்கிய நிறுவனங்கள் இதனால் இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளது.

    சென்னை எப்படி

    சென்னை எப்படி

    அதேபோல் போக்ஸ்வேகன், ஹூண்டாய் மோட்டார் கோ, ஹோண்டா மோட்டார் கோ ஆகிய நிறுவனங்களுடன் இதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னையில்தான் அதிகமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உள்ளது. இதனால் இந்த ஆட்டோமொபைல் நிறுவங்களின் ஆசிய தலைமையகம் சீனாவில் இருந்து சென்னைக்கு மாற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    செம பயன்

    செம பயன்

    ஆசியாவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் உலக நிறுவனங்களின் குறியாக உள்ளது. தற்போது நடக்கும் வர்த்தக போரை இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    India will utilize the Trade between China and USA: May woo foreign companies soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X