சிறப்பாக செயல்படுங்கள் பிரியங்கா காந்தி.. இந்திய தவ்ஹித் ஜமாஅத் வாழ்த்து!
சென்னை: கிழக்கு உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் பிரியங்கா காந்திக்கு இந்திய தவ்ஹித் ஜமாஅத் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதன் துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கை:
பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் பிரியங்கா காந்திக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். ராகுல் காந்தியின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு,பிரியங்கா காந்தியின் நியமனம் மேலும் பலம் சேர்க்க கூடியதாக இருக்கும்.
இந்தியாவில் மத வெறுப்பு அரசியலை முன்வைத்து ஆட்சி நடத்துபவர்களிடமிருந்து இந்தியாவை மீட்க வேண்டிய முக்கிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவின் மதச்சார்பின்மை, பாரம்பரியம், பன்முகத்தன்மை ஆகியவற்றை காக்க காங்கிரஸ் கட்சி பாடுபட வேண்டும்.
உலக அரங்கில் இந்தியாவிற்கு களங்கத்தை ஏற்படுத்தியது பாபரி மஸ்ஜித் இடிப்பு.அன்றைய காங்கிரஸ் கட்சியின் பிரதமர் நரசிம்மராவ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி,மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடன்,பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்பட்டு முஸ்லீம்களிடம் ஒப்படைத்து களங்கத்தை போக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.