ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் ஒன்றிணைவோம்... நெஞ்சம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள் -காதர் மொகிதீன்
சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக நல்லிணக்கத்தில் உலக நாடுகளுக்கு அழகிய முன்மாதிரியாகத் நாம் திகழ்வோம் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;
ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம். தீபாவளி கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறோம்.
இந்தியத் திருநாடு, பாருக்குள்ளே நல்ல நாடு. இதை வல்ல நாடாக மாற்ற வேண்டுமானால் இந்திய மக்களாகிய நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் ஒன்றிணைய வேண்டும்.
அனைவர் வாழ்விலும் இருள் அகன்று ஒளி வீசட்டும்... மக்களுக்கு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து..!
சமத்துவத்திலும், சமூகநீதியிலும், சமதர்மத்திலும், சமுதாயங்களுக்கிடையிலான சுமூக நல்லுறவு மற்றும் நல்லிணக்கத்திலும் உள்ளங்களால் ஒன்றுபடுவோம். உலக நாடுகளுக்கு அழகிய முன்மாதிரியாகத் திகழ்வோம். இதற்கான சூளுரையை தீபாவளி திருநாளில் ஏற்போம்.