சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் புனித இஃப்தார் மற்றும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!
சென்னை: சென்னை வியாசர்பாடியில் நாளை மாலை புனித இஃப்தார் மற்றும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வெளியிட்டுள்ள செய்தியில் நாளை மாலை 4.30 மணிக்கு சென்னை வியாசர்பாடி சர்மாக நகரில் உள்ள மைசூர் மகாலில் முஸ்லிம் லீக்கின் புனித இஃப்தார் மற்றும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இறையன்பன் குத்தூஸ் தலைமையில் இஸ்லாமிய கீதம் இசைக்கப்படவுள்ளது. சிஎப்ம்எஸ் உஸ்மான் பாஷா. எம் அலி அக்பர் உள்பட ஜமாத் நிர்வாகிகள் பலர் பங்கேற்கவுள்ளனர்.
கவிஞர் ஷேகுஜமாலுதீன், டாக்டர் ஹாஜா, மஜீது, ஜஹீருத்தீன், குஞ்சுமோன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஏஎஸ் பாத்திமா முஸப்பர், கிரிராஜன், மனோகர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேஎம் காதர் மொகிதீன், மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன், மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனர்.
இந்தியைத் திணிப்பதா? 1965 மொழிப்போர் மீண்டும் வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை
நவாஸ்கனி, எம்பி கலாநிதி வீராசாமி, முன்னாள் எம்பி மஸ்தான் மற்றும் எம்எல்ஏ ஆர்டி சேகர் ஆகியோரும் இந்த புனித இஃப்தார் மற்றும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.