முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்.. தமிழிசை அதிரடி!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, ஊழல் குற்றச்சாட்டு சொன்ன உடன் பதவி விலக வேண்டும் என்ற அவசியமில்லை.
[ஆண்டாளை பழித்த கவிஞரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார் - தமிழிசை]
அதேசமயம், முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.