உளவுத்துறை எச்சரிக்கை... தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு... தீவிர கண்காணிப்பு
சென்னை: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தீவிர சோதனைக்கு பிறகே, பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தீவிரவாத அச்சுறுத்தல்களும் வெடிகுண்டு மிரட்டல்களும் தொடரும் நிலையில், ரயில்வே போலீசார் தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ரயில்வே காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் நிகழ்த்திய தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து தமிழகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையங்கள், முக்கிய வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக ரயில்வே போலீசார், தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவும், தீவிர சோதனைகளை மேற்கொள்ளவும், ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
எந்த பொண்ணையும் தொட மாட்டேன்.. தொட மாட்டேன்.. கதறும் இளைஞர்.. வைரலாகும் வீடியோ
இலங்கையிலிருந்து வரும் பயணிகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு வெளியே அனுப்பப்படுகின்றனர். இலங்கை பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தமிழகத்திலும் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.